சீனாவில் சினியாங் பகுதியில் உள்ள வன்சி போர்ட் உணவகத்தின் உரிமையாளரான சயோ யன்சியாங் கடற்கரையில் மீனவர்களால் பிடிக்கப்பட்ட இராட்சத சுறாவைக் கண்டார்.
1000 பவுன்ஸ்கள் செலவில் அதனை கொள்வனவு செய்து லொறியில் உணவகத்துக்கு கொண்டுவந்தார்.
5.8 மீற்ரர்கள் நீளமும், 3 மீற்ரர்கள் அகலமும் சுமார் 1.77 தொன் நிறையும் கொண்ட அந்த சுறாவை லொறியை விட்டு அசைக்க முடியவில்லை.
உணவகத்தில் வேலை செய்யும் 50 இற்கும் மேற்பட்டோரின் உதவியால் சமையலறைக்கு இழுத்துவரப்பட்டு, பெரு முயற்சியில் கறியாக்கப்படது.