சிறுவர் ஆபாசப்படங்களுடன் சிறுவர் பாதுகாப்பு அதிகாரி கைது

கிறிஸ்டோபர் சர்விஸ் என்பவர் 49 வயதானவர், இங்கிலாந்தில் தேவாலயம் ஒன்றில் பாதிரியாளராக பணிபுரிந்து வந்திருக்கிறார். திருமணமாகி நான்கு குழந்தைகளுக்கு தந்தையான இவர் 4000 சிறுவர்களின் ஆபாசப் படங்கள் வைத்திருந்தமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவரின் நடத்தையில் சந்தேகம் கொண்ட ஏனைய தேவாலய அலுவலர்கள் பொலீசில் முறையிட்டதன் பெயரில் பொலீசாரினால் இவரின் வீட்டுக் கணினி மற்றும் அலுவலகப்பாவனையில் இருந்த மடிக்கணினி என்பவற்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 4000 க்கும் மேற்பட்ட சிறுவர் ஆபாசப்படங்கள் சிக்கின.



விசாரணைக்காக நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் தொடர்பில் கருத்து தெரிவித்த தேவாலய பேச்சாளர் டேவிட் பாண்ட், கிறிஸ்டோபர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டமையால் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவித்தார்.

மேலும் தேவாலயப் பாதிரியார் இச்சம்பவம் தொடர்வில் பொலீசாருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.