கடத்தல்காரர்களின் சுரங்கம் கண்டுபிடிப்பு

போதைப்பொருட்களை கடத்துவதற்கு  தோண்டப்பட்டுக் கொன்டிருந்த சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மெச்சிக்கோவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைவஸ்துக்களை பொலீஸ் கெடுபிடிகள் இன்றி கடத்துவதற்கு மெச்சிக்கோவில் எல்லையில் அமைந்திருந்த வீட்டில் ஆரம்பித்து சுமார் 298 மீற்றர்கள் தோண்டப்பட்ட நிலையில் இருந்த சுரங்கப்பாதை மெக்சிக்கோ இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஓர் பெண் உட்பட 10 நபர்கள் தேடப்பட்டு வருகிறார்கள்.