புகைத்தலுக்கும் மூளைக்கும் இடையில் உள்ள தொடர்பு பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆராட்சியில் அதிர்ச்சியான முடிவு கிடைத்துள்ளது.
டேவிஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்களினால் 1971 இல் ஆரம்பிக்கப்பட்ட ஆய்வுகளின் தொடர்ச்சியாகவே இவ் முடிவு கிடைத்துள்ளது.
சுமார் 1300 ற்கும் மேற்பட்ட ஆண், பெண்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆராட்சியில் புகைப்பவர்களின் மூளை சுமார் 10 வருடங்களின் பின்னர் வழமையிலும் சுருங்கிக் காணப்பட்டது.
புகைத்தல் புற்றுநோயை உண்டுபண்ணும் என ஏற்கனவே அறியப்பட்ட நிலையில் இவ் ஆராட்சி முடிவு புகைத்தலின் தீமையை மேலும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளது.