இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை பற்றிய கண்காட்சி இம்மாதம் நடைபெற்றது.
அப்போது அங்கே சேவல்களுக்கு ஓர் விசித்திரமான போட்டி நடாத்தப்பட்டது. அப்போட்டி சேவல்களின் கூவல் திறமைகள் தொடர்பில் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
சுமார் 180 சேவல்கள் பங்குபற்றிய இப்போட்டி 1 வயதுக்கு குறைந்த சேவல்கள் பிரிவு, வழக்கமாக ஒலியெழுப்பும் சேவல்கள் பிரிவு, விசேட ஒலி எழுப்பும் சேவல்கள் பிரிவு, மெல்லிய ஒலியெழுப்பும் சேவல்கள் பிரிவு என 4 பிரிவுகளின் கீழ் நடாத்தப்பட்டது.
இதில் வெற்றி பெற்ற கோழிகள் பத்தாயிரம் அமெரிக்க டொலர்களுக்கு மேல் ஏலம் போயின.