இதுவரை அறியப்படாத மர்ம விலங்கினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மேரிலான்ட் எனும் இடத்தில் பிரின்ஸ் ஜியோர்ஸ் மருத்துவமனையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் புகைபிடிப்பதற்காக அருகில் இருந்த புதருக்குள் ஒதுங்கிய போது, உடலில் முடி இல்லாத இதுவரை கண்டிராத அபூர்வ விலங்கு ஒன்று நிற்பதைக் கண்டனர்.
அவர்கள் அளித்த தகவலின் படி அங்குவந்த வனத்துறையினர் விலங்கை லாவகமாக பிடித்தனர்.
நாயின் முகம், கங்காருவின் உடல்தோற்றம், எலியின் வால் என வித்தியாசமாக இந்த ஜந்து தோற்றமளிக்கிறது.