குரங்கின் ஆணுறுப்புக்களை கடத்தியவர் கைது

கொங்கோ நாட்டிலிருந்து குரங்குகளின் ஆணுறுப்புக்கள், கைகள் மற்றும் தலையை கொண்டுவந்த ஜேர்மனியர் கைது செய்யப்பட்டார்.


கொங்கோ நாட்டில் இருந்து ஜேர்மனிக்கு திரும்பிய ஜேர்மனி நாட்டவரை சுங்கத்துறையினர் பரிசோதனை செய்தபோது அவரிடம் இருந்து மேற்படி குரங்குகளின் பாகங்கள் மீட்கப்பட்டன.

டேவிட் பூனு என்பவரே இவ்வாறு சிக்கியுள்ளார். அவரிடம் பொலீசார் விசாரணை நடத்தியபோது, அதனை தான் உண்பதற்காக கொண்டுவந்ததாக தெரிவித்தார்.