யார் தமது செல்போனை அதிகூடிய தூரத்துக்கு எறிகிறார்களோ, அவர்களே வெற்றிவீரர்.
பின்லாந்தில் சொவொன்லினா எனும் இடத்தில் இவ் விநோத போட்டி நடைபெற்றுள்ளது.
ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு, சிறுவர் பிரிவு என இப் போட்டி நடாத்தப்பட்டது.
இதில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். ஒவ்வொருவருக்கும் இரண்டு சந்தர்ப்பங்கள் வழங்கப்படும்.
இதில் ஆண்கள் பிரிவில் ஒஸ்காரி ஹெய்னோனென் என்பவர் 76 மீற்றர் தூரத்துக்கு வீசி எறிந்து முதலிடத்தையும், பெண்கள் பிரிவில் நெட்டா கர்வினன் 48 மீற்றர்களுக்கு வீசி எறிந்து முதலிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.