வளர்ப்பு நாய் கர்ப்பிணியை கொன்றது

கர்ப்பிணிப் பெண்ணொருவரை அவர் வளர்த்த நாயே கொன்ற சம்பவம் சான் பிரான்ஸ்சிஸ்கோ நகரில் இடம்பெற்றுள்ளது.


பிட்புல் நாய் இனத்தை சேர்ந்த நாயே இவ்வாறு தனது எஜமானியையே கொன்றுள்ளது.

சம்பவ தினத்தன்று வேலையில் இருந்து வீடு வந்த கணவர் தனது கர்ப்பிணி மனைவி இரத்த வெள்ளத்தில் தரையில் இறந்து கிடப்பதையும், சடலத்தின் மேல் அவர்களின் வளர்ப்பு நாய் இரத்தம் தோய்ந்த பற்களுடன் விகாரமாக ஏறி நிற்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

ஓடிச் சென்று கதவைப் பூட்டியவர் பொலீசுக்கு தகவல் தெரிவிக்க, அங்கே விரைந்த பொலீசார் நாயை மூன்று முறை துப்பாக்கியால் சுட்டபோதும், நாய் ஓடித்தப்பியது.

இந்தச் சம்பவம் அமெரிக்க நாய்ப் பிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.