மகனை ஓவனில் எரித்த தந்தை

அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஸ்ராடென் தீவில் உள்ள கிரானிரிவில்லி இல் பணத்தை திருடியதால் சிறுவன் ஒருவன் தந்தையால் உயிருடன் எரிக்கப்பட்டுள்ளான்.


53 வயதாகும் ஜேம்ஸ் மொஸ் என்பவர் தனது பாக்கெட்டில் 20 டொலர்கள் காணாமல் போனதையடுத்து அதனை திருடியது தனது மகன் என்பதை கண்டுபிடித்தார்.

கோபம் தலைக்கேற தனது ஒன்பது வயதான மகனான கிறிஸ்டோபர் என்ற சிறுவனை அவரின் வீட்டின் நிலத்தின் கீழ் உள்ள அறையில் உள்ள ஓவனில் தள்ளி உயிருடன் வெப்பத்தில் வாட்டியுள்ளார்.

கடையில் இருந்து திரும்பிய தாய் சம்பவத்தை அறிந்து கூக்குரலிட்டு அயலவர்களை கூட்டி சிறுவனை பாதி வெந்த நிலையில் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்.www.tamilamazing.com

பொலீஸ் மொஸ் ஐ கைது செய்து சிறுவர் சித்திரவதை தொடர்பில் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.