2 மாதங்கள் தொடர்ந்து தூங்கிய பெண்

பெண்ணொருவர் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக தூங்கியிருக்கிறார்.
லில்லி எனும் 21 வயதுப் பெண்ணே இவ்வாறு தூங்கியுள்ளார்.

இவ் இரண்டு மாத தூக்கத்தின் மூலம் இவர் தனது பல்கலைக்கழக பரீட்சை, கிறீஸ்மஸ் கொண்டாட்டம், புதுவருட கொண்டாட்டம் என்பவற்றை இழந்துள்ளார்.

பிறந்த நாளுக்கு இரு தினங்கள் இருப்பதற்கு முன்னதாக இவர் தூக்கத்தில் ஆழ்ந்ததால் பிறந்தினத்தையும் கொண்டாட முடியாமல் போனது.

வருடம் ஒன்றுக்கு சுமார் 7 மாதங்கள் தூங்கும் இவர் தான் வாழ்வில் பல இனிமையான தருணங்களை இழப்பதாக தெரிவித்தார்.

இவருக்கு சிகிச்சையளிக்கும் நிபுணர்கள் இது லெவின் நோயின் அறிகுறி எனவும் இந் நோயை காலப்போக்கில் குணமாக்கிவிடமுடியும் எனவும் தெரிவித்தனர். இந் நோய் இளம் பராயத்தவரை தாக்கக்கூடியது எனவும் மேலும் தெரிவித்தனர்.